தா.கி. கொலை வழக்கு: நீதிமன்றத்தில் அழகிரி ஆஜர்
மதுரை:
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள திமுக தலைவர்கருணாநிதியின் மகன் அழகிரி மற்றும் 12 பேர் இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
வழக்கு விசாரணைக்கா மதுரை 3-வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 13 பேரும் இன்று ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி முகம்மது ஜபருல்லா கான் விசாரணையை அடுத்த மாதம் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந் நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்டு கைதாகியுள்ள கார்த்திகேயன் என்பவர் தன்னை வழக்கிலிருந்துவிடுவிக்கக் கோரி நீதிபதி கானிடம் மனுத் தாக்கல் செய்துதார்.
அழகிரி பண்ணை வீட்டில் திருட்டு:
இதற்கிடையே அழகிரியின் பண்ணை வீட்டில் டிவி உள்ளிட்ட பொருட்களை சிலர் திருடிச் சென்று விட்டனர்.
அழகிரிக்குச் சொந்தமான பண்ணை வீடு மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது. தா.கிருட்டினன்கொலை வழக்கில் சிக்கியது முதல் இந்த வீட்டுக்கு அழகிரி உள்ளிட்ட யாரும் வருவதில்லை. இங்கு வைத்துத்தான்தனது குடும்பத்தினருடன் பொழுதை செலவிடுவது அழகிரியின் வழக்கம்.
இந் நிலையில் இந்த வீட்டுக்கு அழகிரியின் மனைவி காந்தி சென்றார். அங்கு சென்றபோதுதான் வீட்டுக்குள்இருந்த டிவி, மிக்சி, விசிடி பிளேயர் போன்றவை திருடு போயிருந்தது தெரியவந்தது. எப்போது இவைதிருடப்பட்டன என்றே தெரியவில்லை.
இது குறித்து கருப்பட்டி போலீஸ் நிலையத்தில் காந்தி புகார் கொடுத்தார். புகாரை ஏற்ற போலீஸார் தீவிர விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.