அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனுக்கு இன்று மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னைஅப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை அண்ணாநகர் உள்ள தனது வீட்டில் அன்பழகன் திடீரென மயக்கமடைந்தார். இதனையடுத்து அவர்அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். முதலில் சாதாரண பிரிவில் சேர்க்கப்பட்ட அவர்பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, முதன்மைச் செயலாளர்துரைமுருகன், தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் மருத்துவமனை சென்றுஅன்பழகனைச் சந்தித்தனர்.
அன்பழகன் வரும் 24ம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்கவிருப்பதாக இருந்தது. இப்போது உடல்நலம் குன்றியதால்பிரச்சார பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.