பி.எஸ்.என்.எல். செல்போன்: தமிழகம் முழுமைக்கும் இனி ஒரே கட்டணம்
சேலம்:
தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சென்னைக்கு பேசப்படும் செல்போன் அழைப்புகளுக்கு உள்ளூர் கட்டணத்தையே வசூலிக்க பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
பி.எஸ்.என்.எல். செல்போன் அழைப்புகளுக்கு சென்னை தொலை தொடர்பு வட்டம், தமிழக தொலை தொடர்பு வட்டம் என்ற இரு பிரிவுகளின் கீழ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தின் இதர பகுதிகளிலிருந்து சென்னைக்கு செல்போன் மூலம் பேசினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் ரோமிங் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இதை மாற்றி, தமிழகம் முழுவதற்கும் ஒரே கட்டண விகிதத்தை அமல்படுத்த பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன்படி இனி ரோமிங் கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 3.5 லட்சம் செல்போன் இணைப்புகளை பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்கியுள்ளது. 2005ம் ஆண்டுக்குள் இதை 10 லட்சமாக உயர்த்த அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications