ஜ.மு.கூ. புகார் குறித்து விரைவில் முடிவு: டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
சென்னை:
வாக்காளர் பட்டியலில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் கொடுத்துள்ள புகார் குறித்துவிரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, வாக்காளர் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் புகார்கொடுத்துள்ளன. இது குறித்து ஆய்வு நடத்தி விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சித்து அதிமுக தேர்தல் அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளதாக வந்துள்ள புகார் கூறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சட்டப்பூர்வ கருத்தைஅறிந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சுவர் விளம்பரங்கள், விளம்பரப் பலகைகளை அகற்றச் சொல்லி விதிக்கப்பட்டிருந்த காலக் கெடு முடிவடைந்துவிட்டது. விரைவில் டெல்லியிலிருந்து சிறப்பப் பார்வையாளர் ஒருவர் சென்னை வரவுள்ளார். தமிழகம் முழுவதும்சுவர் விளம்பரங்கள், விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதா என்பதை அவர் மேற்பார்வையிட்டு, உரியநடவடிக்கை எடுப்பார்.
தேர்தல் நடத்தை விதிமீறல், முறைகேடுகள் ஆகியவை குறித்தும் இந்த சிறப்புப் பார்வையாளர் மேற்பார்வையிட்டுநடவடிக்கை எடுப்பார் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications