கோஷ்டி மோதலால் காங். வேட்பாளர் தேர்வில் தொடர்ந்து குழப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

10 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதில் காங்கிரஸ் மேலிடத்திற்கு பெரும்குழப்பம் ஏற்பட்டுள்ளது. பிரச்சாரத்தில் உள்ள சோனியா அடுத்த வாரம் டெல்லி திரும்பிய பின்னரே பட்டியல்இறுதி செய்யப்படும் என்பதால் அங்கு முகாமிட்டிருந்த தமிழகத்தின் பல்வேறு கோஷ்டிகளும் ஊர் திரும்பஆரம்பித்துவிட்டன.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் நீலகிரியில் ஆர்.பிரபு, மயிலாடுதுறையில்மணிசங்கர அய்யர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது முன்னால் தா.ம.கவுக்கு 6 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று வருகிறார் வாசன்.இதனால் மீதமுள்ள 8 பேருடைய பெயர்களை இன்னும் இறுதி செய்ய முடியாமல் தவிக்கிறது காங்கிரஸ் மேலிடம்.

அய்யர் தனி கோஷ்டி. நீலகிரியில் இடம் பிடித்துவிட்ட பிரபுவோ இளங்கோவன் கோஷ்டி. சேலத்தை கேட்கும்தங்கபாலு வேறு கோஷ்டி. சிவகங்கையை கேட்கும் ப.சிதம்பரம் வேறு கட்சி!.

இது தவிர தனக்கு கோபிச்செட்டிப்பாளையத்தை வாங்கிவிடும் முயற்சியில் இருக்கும் இளங்கோவன், தனதுஆதரவாளரான பீட்டர் அல்போன்சுக்கும் ஒரு தொகுதியைக் கேட்கிறார்.

இப்படி எல்லாம் போக தனது ஆதரவாளர்களுக்கு வெறும் 4 சீட் மட்டுமே கிடைக்கும் என்பதால் பட்டியலை இறுதிசெய்ய விடாமல் வாசன் தடை போடுவதாகத் தெரிகிறது.

உங்கள் கோஷ்டியில் உங்களுக்கும் பிரபுவுக்கும் சீட் கொடுத்துவிட்டோம். இதனால் பீட்டருக்கு சீட் கிடையாதுஎன்று இளங்கோவன் தரப்பை அடக்கிவிட்டு, 5 இடங்களை வாசன் கோஷ்டிக்குத் தந்து பிரச்சனையைத் தீர்க்ககாங்கிரஸ் மேலிடம் முயன்று வருகிறது.

வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பதில் தாமதமாக. தாமதமாக தமிழக காங்கிரசார் மத்தியில் டென்ஷன் கூடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே டெல்லியில் முகாமிட்டு எப்படியாவது சீட் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தகுட்டித் தலைவர்கள் பலரும் ஊர் திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

கருணாநிதியுடன் பிரபு சந்திப்பு:

இதற்கிடையே நீலகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் ஆர்.பிரபு இன்று திமுக தலைவர்கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மரியாதை நிமித்தம் கருணாநிதியை சந்தித்தேன். தேர்தல் பிரசாரம்தொடர்பாகவும் விவாதித்தேன். கூட்டணியைச் சேர்ந்த மற்ற கட்சித் தலைவர்களையும் விரைவில் சந்திப்பேன்.

நீலகிரி தொகுதியின் முக்கியப் பிரச்சினை தேயிலை விவசாயிகளின் பிரச்சினைதான். ஜெயலலிதாவின் ஆட்சியில்சிறு தேயிலை விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதை முன் வைத்து தான் பிரசாரம்செய்யப் போகிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+