மதுரை செக்ஸ் டாக்டர்: நீதிமன்ற காவலிலிருந்து போலீஸ் காவலுக்கு மாற்றம்
மதுரை:
பெண்களை மயக்கி கற்பழித்து, ஆபாசப் புகைப்படம் எடுத்ததாகக் கூறி கைதாகியுள்ள மதுரை டாக்டர்ராஜகோபாலை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மதுரை 5-வது குற்றவியல் நீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது.
தன்னைக் கற்பழித்து, ஆபாசப் படம் எடுத்ததாகக் கூறி டாக்டர் ராஜகோபால் மீது பரிமளா என்ற பெண் புகார்கொடுத்தார். இதைத் தொடர்ந்து தலைமறைவான ராஜகோபாலை தேவகோட்டையில் வைத்து போலீஸார் கைதுசெய்தனர்.
தற்போது நீதிமன்றக் காவலில் உள்ள ராஜகோபாலிடம் விசாரணை செய்ய வேண்டியுள்ளதால் அவரை 5நாட்களுக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை போலீஸார், மதுரை 5வது குற்றவியல்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி இந்திராணி, டாக்டர் ராஜகோபாலை, 2 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கஅனுமதி கொடுத்தார்.
பரிமளா உள்ளிட்ட பல பெண்களுக்கு போதை ஊசி போட்டு மயக்கப்படுத்தி அவர்களைக் கற்பழித்த பின்னர்,விதம் விதமாக நிர்வாண கோலத்தில் புகைப்படம் எடுத்ததாக டாக்டர் ராஜகோபால் மீது புகார் கூறப்பட்டுள்ளது.தென்னக ரயில்வேயில் வேலை பார்த்து வந்த ராஜகோபால் இந்த புகாருக்குப் பின்னர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.