வேலைநீக்கத்தை எதிர்த்து காதி கிராம ஊழியர்கள் வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு தங்களை வேலைநீக்கம் செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி தமிழ்நாடு காதி கிராம தொழில் வாரியஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியின்போது பணியில் சேர்க்கப்பட்ட 842 காதி கிராம தொழில் வாரிய ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி இவர்கள் வேலையிலிருந்துநீக்கப்படவுள்ளனர். முதல் கட்டமாக கடந்த 12ம் தேதி 97 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
இந் நிலையில், தங்களை அரசு பதவி நீக்கம் செய்வதை எதிர்த்தும், முறைப்படி வேலைவாய்ப்பகம் மூலம் பணியில்சேர்ந்த தங்களை பதவி நீக்கம் செய்வதைத் தடுக்கக் கோரியும் 40 ஊழியர்கள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீது இன்று பிற்பகல் நீதிபதி ரவிராஜ் பாண்டியன் விசாரணை நடத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications