ஐ.பி.கே.எப் வீரர்களுக்கு நினைவகம்: இலங்கை திட்டம்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டையில் உயிர் துறந்த இந்திய அமைதிப்படை வீரர்களுக்குநினைவகம் அமைக்கும் வேலையை இலங்கை ராணுவம் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக இலங்கை ராணுவ அதிகாரி லியோனெல் பாலகல்லே கூறியதாவது:
இலங்கையில் உயிர் துறந்த இந்திய வீரர்களுக்கு நினைவகம் அமைப்பது தொடர்பாக இந்திய ராணுவத்தினரிடமும்,இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களிடமும் விவாதித்தேன்.
நினைவகத்துக்கான மாதிரியை செய்து தருவதாக இந்திய ராணுவத்தினர் கூறியிருந்தனர். அதன்படி இரண்டுமாதிரிகளை அனுப்பியுள்ளனர். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் இறந்த இலங்கை ராணுவவீரர்களுக்காக நினைவகம் அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அருகில் இந்த நினைவகம் அமைக்கப்படவுள்ளது.இதற்கான அனுமதி மேயரிடம் கோரப்பட்டுள்ளது.
போரில் மரணமடைந்த 1,155 இந்தியர்களின் பெயர்களும் இந்திய ராணுவத்திடம் கோரப்பட்டுள்ளன. இந்தமுயற்சிக்கு அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் ஆதரவு தெரிவித்துள்ளனர்என்று கூறினார்.












Click it and Unblock the Notifications