வைகோ வழக்கு: 2 அரசு சாட்சிகள் பல்டி!
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீதான பொடா வழக்கில் 2 அரசு தரப்பு சாட்சிகள்தங்களது வாக்குமூலத்தை மறுத்துள்ளனர்.
மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகபேசியதாகக் கூறி வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினர் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான சாட்சிகள் சசிக்குமார், நேதாஜி ஆகியஇருவரும் தங்களது வாக்குமூலத்தை மாற்றிச் சொல்லியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜன் சவுண்ட் சர்வீஸ் நிறுவனத்தின் ஊழியர் சசிக்குமார் கூறுகையில், கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம்தேதி திருமங்கலத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில், எனது உரிமையாளரின் உத்தரவுப்படி ஒலிபெருக்கிகள்,மின்சார சாதனங்களை அமைத்திருந்தேன்.
மாலை 6 மணி வரை கூட்டம் எதுவும் நடக்கவில்லை. மேடையிலும் யாரும் இல்லை. அதன் பின்னர்ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்கு சென்று விட்டேன். பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தின்போதுஜெனரேட்டர் சப்தம் காரணமாக பேச்சாளர்களின் பேச்சுக்கள் எதுவும் எனக்குக் கேட்கவில்லை. மேடையில் யார்இருந்தார்கள் என்பதும் எனக்குச் சரியாகத் தெரியவில்லை என்றார்.
ஆட்டோ டிரைவர் நேதாஜி கூறுகையில், ராஜன் சவுண்ட் சர்வீஸ் நிறுவனத்தில் 2 மாதங்கள் மட்டுமே நான் வேலைபார்த்தேன். மதிமுக பொதுக் கூட்டம் குறித்து எனக்கு சரியாக நினைவில்லை. எனவே இது குறித்து போலீஸாரிடம்நான் எதையும் சொல்லவில்லை என்றார்.
இரு சாட்சிகளும் போலீஸாரிடம் கூறிய வாக்குமூலத்தை மறுத்து மாற்றிக் கூறியதால் நீதிமன்றத்தில் பரபரப்புஏற்பட்டது.












Click it and Unblock the Notifications