சேலத்தில் ஜெயலலிதாவுக்கு கூடிய பெருங்கூட்டம்
சேலம்:
சேலத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கு கொண்ட பொதுக் கூட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் திரளாகக்கூடியிருந்து அவருக்கு உற்சாகம் தந்தனர்.
கடந்த 7 நாட்களாக ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டம் குறைவாகவே இருந்து வந்தது. இதனால்கோபமடைந்த ஜெயலலிதா மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த அமைச்சர்களை அழைத்துகடுமையாகக் கண்டித்தார்.
இதனால் அமைச்சர்கள் வேன் மூலம் ஆட்களைப் பிடித்து கூட்டம் சேர்த்து வந்தனர். ஆனாலும் கூட்டம்குறைவாகவே இருந்து வந்ததாக அதிமுக தரப்பிலேயே கூறப்பட்டது. இந் நிலையில் ஜெயலலிதாவுக்கு உற்சாகம்வரவழைக்கும் வகையில் சேலம் பொதுக் கூட்டத்துக்கு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.
ஜோடிப்புள்ளி, தீவத்திப்பட்டி, ஓமலூர், கருப்பூர் ஆகிய ஊர்களில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, சேலம்வந்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி,பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் மீதான தனது வழக்கமானதாக்குதலை முடித்துவிட்டு ஜெயலலிதா பேசியதாவது:
கடந்த 30 ஆண்டுகளில் ஆட்சி நடத்தியவர்கள் செய்த வளர்ச்சிப் பணிகளை இந்த 3 ஆண்டுகளில் செய்துமுடித்துள்ளேன். எனது ஆட்சியில் தமிழகம் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டு வருகிறது. பெண்களின்முன்னேற்றத்துக்காக பல நல்ல திட்டங்களைஅறிமுகப்படுத்தியுள்ளேன்.
நான் பதவியேற்ற போது அரசு கஜானா காலியாக இருந்தது. இப்போது நிதி நிலை சீரடைந்ததற்கு எனதுதலைமையிலான அரசே காரணமாகும் என்றார்.












Click it and Unblock the Notifications