25 தொகுதிகளில் மக்கள் கூட்டணி போட்டி
சென்னை:
தலித் கட்சிகள், மக்கள் தமிழ் தேசம், இந்திய தேசிய லீக் ஆகியவை இணைந்த மக்கள் கூட்டணி நாடாளுமன்றத்தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.
தலித் கட்சிகளான புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் மக்கள் தமிழ் தேசம், இந்திய தேசிய லீக் ஆகியகட்சிகள் இணைந்து மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய அணியை உருவாக்கியுள்ளன. இந்த அணியில்இணையும் என்று கூறப்பட்ட புதிய நீதிக் கட்சி இப்போது தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறி விட்டது.
இந் நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி, தொல்.திருமாவளவன், எஸ்.கண்ணப்பன் ஆகியோர் சென்னையில்செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது 25 தொகுதிகளில் தங்களது கூட்டணி போட்டியிடவுள்ளதாக அவர்கள்தெரிவித்தனர்.
இதன்படி, விடுதலைச் சிறுத்தைகள் 8 தொகுதிகள் (சிதம்பரம், மதுரை, மயிலாடுதுறை, பெரம்பலூர், தர்மபுரி,ஸ்ரீபெரும்புதூர், ராசிபுரம், பாண்டிச்சேரி), புதிய தமிழகம் 5 தொகுதிகள் (தென்காசி, திருநெல்வேலி, சிவகாசி,பெரியகுளம், பொள்ளாச்சி), இந்திய தேசிய லீக் 3 (புதுக்கோட்டை, கடலூர், திருப்பத்தூர்) தொகுதிகளில்போட்டியிடவுள்ளன. இக்கூட்டணி உருவாகக் காரணமான ஐக்கிய ஜனதாதளம் பழனி, திண்டுக்கல், திருச்சி ஆகியதொகுதிகளில் போட்டியிடுகிறது.
புரட்சி கவுன்சில் என்ற குட்டிக் கட்சியும் இந்தக் கூட்டணியில் இணைந்து நாகை தொகுதியில் போட்டியிடுகிறது.மக்கள் தமிழ் தேசம் 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இருப்பினும் தொகுதிகளின் பெயர்கள்அறிவிக்கப்படவில்லை.
தலைவர்களைப் பொருத்தவரை எஸ்.கண்ணப்பன் ராமநாதபுரத்திலும், டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசியிலும்போட்டியிடுகிறார்கள். திருமாவளவன் சிதம்பரம் மற்றும் இன்னொரு தொகுதி என 2 தொகுதிகளில்போட்டியிடவுள்ளார். அனைவரும் ஐக்கிய ஜனதா தளத்தின் அம்பு சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.












Click it and Unblock the Notifications