ஜெ. பிரச்சாரத்தை வீடியோ படம் எடுக்க வாசன் கோரிக்கை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரங்களின்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக மீறப்படுகின்றன.எனவே அவரது பிரச்சாரத்தை வீடியோ படம் எடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சாரத்தில் தேர்தல்நடத்தை விதிமுறைகள் கடுமையாக மீறப்படுவதாக புகார்கள் வருகின்றன.
இலவச மின்சாரத்தை ரத்து செய்து விட்டு, ஜெயலலிதாவின் பிரச்சாரங்களின்போது மின்சாரம் அதிக அளவுக்குமுறைகேடாக பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். எனவே ஜெயலலிதாவின் பிரச்சாரங்களைவீடியோ படம் எடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறாமல் தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்.நடத்தை விதிமுறைகளை காற்றில் பறக்க விடும் ஜெயலலிதாவை தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கண்காணிக்கவேண்டும்.
மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இடைக்கால வறட்சி நிவாரண நிதியை வழங்கியுள்ளது. இந்தநிதி போதுமானதாக இல்லை. இருப்பினும் இந்த நிவாரணப் பணிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தவேளையில் வெளிப்படையாக செய்யப்பட வேண்டும். நிவாரணப் பணிகள் எந்தவித குறுக்கீடும் இல்லாமல்விரைவாக மக்களைச் சென்றடைய வேண்டும்.
பிளஸ்டூ தேர்வுகள் நடைபெறுவதால் காங்கிரஸ் தொண்டர்கள் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தி பிரச்சாரம்செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார் அவர்.