மீண்டும் அரசியல் களம் காணும் பி.டி.ஆர்.!
மதுரை:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அரசியல் களத்தில் குதிக்கிறார்.
திமுக ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு முக்கியப் பதவியில் இருப்பார் பழனிவேல்ராஜன்.ப.சிதம்பரம் போலவே இவரும் அவ்வப்போது பாலிடிக்ஸ் செய்பவர்.
அடிக்கடி கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு கொள்பவர். முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் படுகொலைக்குப்பிறகு மிகவும் அமைதியாகி விட்ட அவர் கிட்டத்தட்ட அரசியலிலிருந்தே விலகியவர் போலக் காணப்பட்டார்.தா.கி படுகொலை மற்றும் கோஷ்டிப் பூசல் காரணமாக அவர் வெறுத்துப் போயிருந்தார்.
இந் நிலையில் அவரை கட்சி மேலிடம் சமரசப்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடஅவர் முடிவு செய்துள்ளார். முதல் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளத்தில் போட்டியிடும் காங்கிரஸ்வேட்பாளருக்குஆதரவாக பி.டி.ஆர் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
பி.டி.ஆரின் சொந்த ஊரான உத்தமபாளையம், பெரியகுளம் தொகுதியின் கீழ் தான் வருகிறது. இதனால் கம்பம்,தேனி, போடி, பெரியகுளம், உத்தமபாளையம் பகுதிகளில் பி.டி.ஆருக்கு நல்ல பெயர் உள்ளது. மேலும் அவர்சார்ந்துள்ள பிள்ளைமார் சமூகத்தினரும் இப்பகுதிகளில் கணிசமாக உள்ளார்கள். எனவே அவரது பிரச்சாரம்காங்கிரஸ் வெற்றிக்கு உதவும் என்று திமுக மேலிடம் கருதுகிறது.