திமுக கூட்டத்தைக் கலக்கிய "மப்பு" தொண்டர்!
மதுரை:
எதிரிகளை எப்படி சமாளிப்பது என்பது குறித்து திமுக தலைவர்கள் எனக்கு தெளிவாக விளக்க வேண்டும் என்றுகூறிக் கொண்டு குடிபோதையில் வந்த திமுக தொண்டரால், மதுரை திமுக செயற்குழுக் கூட்டத்தில் பரபரப்புஏற்பட்டது.
மதுரை தேர்தல் பிரச்சாரப் பணிகள் குறித்து விவாதிக்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொள்ள ஒரு திமுக தொண்டர் வந்தார். நல்ல குடிபோதையில், நடக்கக் கூட முடியாமல் தட்டுத் தடுமாறி வந்தஅவரைப் பார்த்ததும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தினரைப் பார்த்ததும் அந்த குடிகார தொண்டர், இங்குள்ள தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நம்முடையஎதிரிகள் ஏதாவது பிரச்சினை செய்தால், அவர்களை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை எனக்கு தெளிவாகஎடுத்துக் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். அது கூட தெரியாவிட்டால் நாம் திமுககாரர்களே கிடையாது என்றுஉளற ஆரம்பித்தார்.
விட்டால் அவர் திமுகவையே கலாய்த்து விடுவார் என்று அறிந்து கொண்ட திமுகவினர், அப்படியே அலாக்காகதூக்கி அவரை வெளியே கொண்டு போய் விட்டனர்.
அப்படியும் அந்த மப்புக்காரர் விடவில்லை. இதையெல்லாம் கூட சொல்லித் தர வில்லை இந்த தலைவர்களுக்கு.இவர்கள் நிச்சயம் திமுக தலைவர்களே கிடையாது என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தார்.