டிவி நிகழ்ச்சியில் பாதியில் வெளியேறிய வலம்புரி ஜான்
சென்னை:
விஜய் டிவியில் ஏற்பாடு செய்திருந்த விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் பிரமுகருடன் ஏற்பட்ட மோதலில் வலம்புரிஜான் பாதியிலேயே வெளியேறினார்.
விஜய் டிவியில் மக்கள் யார் பக்கம் என்ற தலைப்பில் அரசியல் பிரமுகர்களுடன் விவாத நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.நேற்றிரவு இந்த நிகழ்ச்சிக்கு பத்திரிக்கையாளர் ஞானி தலைமை வகித்தார். இதில் திமுகவிலிருந்து விலகிய ஆலடிஅருணா, முன்பே அக் கட்சியிலிருந்து விலகிய வலம்புரி ஜான், காங்கிரஸ் துணைத் தலைவர் கேெளரி சங்கர்ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆலடி அருணா திமுகவை கடுமையாக விமர்சித்தார். அப்போது குறுக்கிட்ட ஞானி, நீங்கள் திமுகவில்இருந்தபோது இந்தத் தவறுகள் தெரியவில்லையா என்று கேட்டார். அதற்கு அருணா மழுப்பலாக பதில் கூறினார்.ஆனாலும், கோபப்படாமல் நிதானமாகப் பேசினார்.
அடுத்த பேசிய வலம்புரி ஜான், திமுக துணை பொதுச் செயலாளர் ஸ்டாலினுக்கு அனுபவம் இல்லை. நான்இன்னும் திமுக இலக்கிய அணியில் இருந்தாலும் செயல்படாமல் இருக்கிறேன் என்று கூறினார். அப்போதுகுறுக்கிட்டு ஞானி கேள்வி கேட்க முனைத்தார்.
அதற்கு வலம்புரி ஜான், இனியொரு முறை குறுக்கிட்டால் எழுந்து போய் விடுவேன் என்று மிரட்டும் தொனியில்கூறினார்.
பிறகு கெளரி சங்கர் பேசுகையில், வலம்புரி ஜான் தாவாத கட்சியே இல்லை. இன்று அவர் எந்தக் கட்சியில்இருக்கிறார் என்பதை ஒவ்வொரு நாளும் மக்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள் என்றார்.
இதனால் கடுப்பாகிப் போன வலம்புரி ஜான் எழுந்து போய் விட்டார். கெளரி சங்கரின் பேச்சுக்குப்பின்விளம்பரம் போடப்பட்டது. விளம்பரத்துக்குப் பிறகு பார்க்கும்போது, வலம்புரி ஜான் அங்கு இல்லை. அவர்போய்விட்டதாக ஞானி கூறினார். அவர் இல்லாமல் விவாதம் தொடர்ந்து நடந்தது.