மதுரை: ஒரே தண்டவாளத்தில் எதிரெதிர் திசையில்... மாபெரும் விபத்திலிருந்து தப்பிய ரயில்கள்
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றத்தில் 2 பயணிகள் ரயில்கள் மாபெரும் விபத்திலிருந்து தப்பின.
மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில் இரவு 11 மணியளவில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தைநெருங்கிக் கொண்டிருந்தது. எதிர் திசையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை சென்ற ரயில் வந்துகொண்டிருந்தது.
மின்னணு சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிர் திசையில்வந்து கொண்டிருந்தன. திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தை ரயில்கள் நெருங்கியபோது இரு டிரைவர்களும்நிலைமையை உணர்ந்தனர்.
அவசர கதியில் செயல்பட்ட இரு ரயில்களின் டிரைவர்களும் எமர்ஜென்சி பிரேக் போட்டு ரயில்களை நிறுத்தினர்.
சுமார் 20 அடி தூரம் நெருங்கிவிட்ட இரு ரயில்களும் நேருக்கு நேர் வந்து நின்றன.
டிரைவர்களின் சமயோசிதத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நள்ளிரவில் நடந்த இந்த பயங்கரசம்பவத்தால் பயணிகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். சுமார் இரண்டரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு இருரயில்களும் புறப்பட்டுச் சென்றன.












Click it and Unblock the Notifications