For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகு காலம் பார்க்கும் திராவிட "தலை"கள்!

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

நாத்திகம் பேசும் திராவிட தலைவர்களில் பலர் ராகு காலம் பார்த்த பிறகே தங்களது தேர்தல் தொடர்பானபணிகளை பார்க்கின்றனர்.

பெரியாரின் தொண்டர்கள், திராவிட இயக்க தீவிரவாதிகள் என்றெல்லாம் கூறிக் கொள்ளும் பலர் ரகசியமாககடவுள் நம்பிக்கையில் தீவிரமாக இருப்பார்கள். சிலர் வீட்டில் இருக்கும்போது பக்திப் பழமாக இருப்பார்கள்.ஆனால் கூட்ட மேடைக்கு வரும்போது கருப்புத் துண்டு, பொட்டு அழிக்கப்பட்ட நெற்றி என சுத்த நாத்திகராகவந்து சேருவார்கள்.

சமீபத்தில் நடிகர் சந்திரசேகர் திமுக தேர்தல் பிரச்சார பயணத்தில் கலந்து கொள்வதற்காக வந்தபோது, தான்தங்கியிருந்த ஹோட்டலில் நெற்றியில் விபூதியும், சந்தனமும் வைத்துக் கொண்டு வேட்டி, சட்டையில் பக்தி மணம்கமழக் காணப்பட்டார். விழா மேடைக்கு வந்தபோது கருப்புத் துண்டு, பேண்ட், சட்டை, பாழ் நெற்றி எனதிராவிடப் பிள்ளையாக மாறியிருந்தார்.

இதேபோல, சமீபத்தில் திருச்சியில் நடந்த மதிமுக செய்தியாளர்கள் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கே.என்.நேருவும், வேட்பாளர் எல்.கணேசனும் ராகு காலம் பார்த்தே தங்களது பேட்டியைத் தொடங்கினர்.

பேட்டிக்காக செய்தியாளர்கள் வந்து காத்திருந்தும் கூட நேரு வந்தபாடில்லை. விசாரித்தபோது, ராகுகாலம்நடப்பதால் அது முடிந்த பிறகு வந்து விடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல, ராகு காலம் முடிந்த பிறகேசெய்தியாளர்களைச் சந்திக்க வந்தார் நேரு.

எல்.கணேசனும், நேரு வரும் வரையிலும் அதாவது ராகு காலம் முடியும் வரையிலும் வாய் திறப்பதில்லை என்றுஉறுதியாக இருந்தார். பேட்டியை ஆரம்பியுங்களேன் என்று நிருபர்கள் கேட்டபோதும், நேரு வந்துடட்டுமே என்றுமட்டுமே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தார்.

வாழ்க திராவிடம்! வளர்க நாத்திகம்!!

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X