ஜெ. ஒரு முழு வேக்காடு: இளங்கோவன்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா எப்போதோ முழு வேக்காடாகி அழுகிப் போய்விட்டார் என்று காங்கிரஸ் முன்னாள் செயல்தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூர் பகுதி திமுக இளைஞர் அணி சார்பில் தென் சென்னை திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவைஆதரித்து நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசியதாவது:
தமிழகத்தை ஆளும் அம்மையாருக்கு இரண்டு பேர் மீது கண் உண்டு. ஒருவர் டி.ஆர்.பாலு. இன்னொருவர் நான்.பாலுவுக்கு இது தொடர்பாக அறிவிப்பு வந்து விட்டது. எனக்கு இன்னும் வரவில்லை. எப்பாடுபட்டாவதுபாலுவைத் தோற்கடிக்க முயற்சிக்கிறார்கள். அது நடக்காது.
ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார். மக்கள் பணத்தை எப்படியெல்லாம்கொள்ளையடிக்கலாம் என்று உழைக்கிறாரா?
நாட்டில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. உண்ண உணவில்லாமல் தஞ்சை விவசாயிகள் எலிக்கறி சாப்பிடுகிறார்கள்.இதைச் சொன்னால் என் மீதும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லக்கண்ணு மீதும் வழக்குபோடுகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அரை வேக்காடு என்று ஜெயலலிதா கூறுகிறார். இவர் எப்போதுமுழுவேக்காடாகி அழுகிப் போய்விட்டார். தடித்த தோல் உள்ளவர்களுக்கு இடிப்பது போல் சொன்னால்தான்புரியும் என்றார்.












Click it and Unblock the Notifications