சந்திரிகாவின் பேச்சுக்கு எல்.எல்.டி.ஈ., கருணா மறுப்பு
கொழும்பு:
அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக தான் விடுதலைப் புலிகளைத் தொடர்பு கொண்டதாகவும், விடுதலைப்புலிகளில் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கருணா தன்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் அதிபர்சந்திரிகா குமாரதுங்கா கூறியதை இரு தரப்பினரும் மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள்இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன் ஒரு பத்திரிக்கைக்குஅளித்த பேட்டியில், அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக புலிகளைத் தொடர்பு கொண்டதாகவும், தேர்தலுக்குப்பின் அவருடன் பேச்சுவார்த்தையைத் தொடர புலிகள் ஆர்வமாக இருப்பதாகவும் சந்திரிகா கூறியிருக்கிறார். இதுமுற்றிலும் பொய்யானது.
மேலும், கருணாவுடன் சமாதான உடன்படிக்கையை செய்ய சந்திரிகா முடிவெடுத்தால், அதற்கு எங்களதுவாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இதற்கிடையே, கருணா தன்னுடன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக பேச விரும்பியதாகவும், அதைத் தான்நிராகரித்ததாகவும் சந்திரிகா கூறியதை கருணாவின் செய்தித் தொடர்பாளர் வரதன் மறுத்துள்ளார். இதுபொய்யான தகவலாகும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications