தான் கட்டிய சமாதியிலேயே மரணமடைந்த 111 வயது பூசாரி!
மதுரை:
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே 111 வயது பூசாரி தான் கட்டி வைத்திருந்த சமாதிக்குள் சென்று நான்குநாட்களுக்குப் பிறகு மரணமடைந்தார்.
பேரையூர் அருகே உள்ளது கீழப்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் வைரவன். 111 வயதாகும்வைரவனுக்கு வேலு (77 வயது), தேனம்மாள் (65), முத்துப் பேச்சி (54), சின்னத்தம்பி (54) ஆகிய மகன், மகள்கள்உள்ளனர்.
விவசாய வேலை பார்த்து, மகன், மகள்களுடன் வசித்து வந்த வைரவன், 50 ஆண்டுகளுக்கு முன்பு துறவறம்பூண்டார். மனைவி, மக்களை விட்டு விலகி ஒரு கோவில் கட்டி அதில் பூசாரியாக இருந்தார்.
தான் கட்டி வைத்த கோவிலுக்கு அருகிலேயே சமாதி ஒன்றையும் கட்டினார் வைரவன். தனது மரணத்தைமுன்கூட்டியே ஊர் மக்களுக்கும் தெரிவித்திருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பு தனது சமாதிக்குள் இறங்கினார்.இன்னும் நான்கு நாட்களில் தான் மரணமடைந்து விடுவேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதேபோல வெள்ளிக்கிழமை அவர் மரணமடைந்தார். 111 வயது வரையில் ஒரு நோய் நொடி இல்லாமல்வாழ்ந்து மறைந்த வைரவனுக்கு கீழப்பட்டி கிராம மக்கள் புகழாரம் சூட்டினர். அவரது சமாதிக்குச் சென்று கண்ணீர்அஞ்சலி செலுத்தினர்.