திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை அருகே சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருக்கு சென்னம்மாள் என்றமனைவியும், வெங்கடேஷ் என்ற மகனும், குமாரி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் காதுகேட்காது.
அண்ணாமலைக்கும் அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரனுக்கும் நீண்டகாலமாக நிலத்தகராறு இருந்து வந்தது. இந்தத்தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் 5 பேர் கொண்ட கும்பலுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தஅண்ணாமலை, சென்னம்மாள், வெங்கடேஷ் ஆகிய 3 பேரையும் கொடூரமாக வெட்டி கொன்றது.
மகள் குமாரி மட்டும் தப்பி ஓடி னாள். கொலையாளிகள் 6 பேரும் தலைமறைவாகி விட்டனர். இச்சம்பவம் குறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications