பிரபாகரன் சரணடைவது நல்லது: சு.சுவாமி
மதுரை:
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், பொட்டு அம்மானும் இலங்கையில் உள்ள இந்தியதூதரகத்தில் சரணடைவது நல்லது என்று ஜனதாக் கட்சி தலைவர் சுப்புரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சு.சுவாமி கூறியதாவது: இலங்கையில் விடுதலைப் புலிகள்இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள கருணாவை ஆதரிக்க அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா ஆகிய நாடுகள் முடிவுசெய்துள்ளன. எனவே பிரபாகரனும், பொட்டு அம்மானும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் சரணடைவதுநல்லது.
கடந்த தேர்தலில் வாக்கு கேட்டபோது மோகன், தான் வெற்றி பெற்றால் முல்லை பெரியாறு பிரச்னை குறித்துகேரள அரசிடம் பேசி 152 அடி தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். ஆனால் வெற்றி பெற்ற பிறகுஇந்த பிரச்னைக்காக ஒரு முறை கூட திருவனந்தபுரம் செல்லவில்லை. லீலாவதி படத்தை போட்டு அனுதாப ஓட்டுகேட்டு வெற்றி பெற்ற மோகன் இந்த தேர்தலில் லீலாவதியை மறந்து விட்டார்.
நான் எம்.பி.,யாக இருந்த போது கொண்டு வந்த திட்டங்களை தாங்கள் நிறைவேற்றியதாக மோகன் கூறுகிறார்.
மதுரை தொகுதியில் தினமும் 2 கூட்டங்கள் வீதம் 28 நாட்களுக்கு முதல் கட்டப் பிரச்சாரம் செய்யதிட்டமிட்டுள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications