திருமாவளவன் மாநாட்டில் பெர்னாண்டஸ் இன்று பங்கேற்பு
சேலம்:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சேலத்தில் இன்று நடைபெறும் இந்துத்வா எதிர்ப்பு மாநாட்டில் மத்தியபாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கலந்து கொள்கிறார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சேலத்தில் இந்துத்வா எதிர்ப்பு மாநாடு இன்று நடக்கிறது. இதற்காக போஸ்மைதானத்தில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வித்தியாசமான வடிவமைப்பில் மேடையும்ரெடியாகி உள்ளது.
இந்த மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கலந்து கொள்ளவுள்ளார். அவருடன்,மத்திய இணை அமைச்சர் திக் விஜய் சிங், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் சோமசேகர், ஐக்கிய ஜனதாதளத்தின் அகில இந்திய மகளிர் அணித் தலைவியான லட்சுமி கோஸ்வாமி ஆகியோரும் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
திருமாவளவன் பேட்டி:
இதற்கிடையே மக்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் பிரச்சாரம் செய்வார் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின்ஒருங்கிணைப்பாளராக பெர்னாண்டஸ் இருப்பதால் தமிழகத்தில் மக்கள் கூட்டணிக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம்செய்யக் கூடாது என்று பா.ஜ.க. கூற முடியாது.
பா.ஜ.க. வேறு, தேசிய ஜனநாயகக் கூட்டணி வேறு. தமிழகத்தில் தனக்கு விருப்பமான கூட்டணி வைத்துக்கொள்ள பா.ஜ.கவுக்கு உரிமை உள்ளதுபோல, ஜார்ஜ் பெர்னாண்டஸின் ஐக்கிய ஜனதாதளத்திற்கும் கூட்டணிஅமைக்கும் உரிமை உள்ளது.
எனவே, தமிழகத்தில் மக்கள் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகளுக்கு ஆதரவாக ஜார்ஜ் பெர்னாண்டஸ்பிரச்சாரம் செய்வார் என்றார் திருமாவளவன்.
மக்கள் கூட்டணியில் புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய தலித் கட்சிகளும், மக்கள் தமிழ் தேசம்,இந்திய தேசிய லீக் கட்சியும் இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications