போலி சாதி சான்றிதழ்: 164 பி.இ. மாணவர்களை டிஸ்மிஸ் செய்ய முடிவு
சென்னை:
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று போலியான சாதிச் சான்றிதழைக் கொடுத்துதமிழகத்தின பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த 164 பேரை டிஸ்மிஸ் செய்ய அண்ணா பல்கலைக்கழகம்முடிவெடுத்துள்ளது.
2002-2003ம் கல்வி ஆண்டில் 6,240 மாணவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான கோட்டாவில்பி.இ. மற்றும் பிடெக் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இவர்களில் சுமார் 1,000 மாணவர்கள் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளில்படிப்பவர்கள்.
இந்த 6,240 மாணவர்களும் கொடுத்த சாதிச் சான்றிதழ்களை அணணா பல்கலைக்கழகம் சரிபார்த்தபோது இதில்சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து 164 மாணவர்கள் போலிச் சான்றிதழ்கொடுத்திருப்பது தெரிய வந்தது.
யாதவ், ரெட்டி என்று முடிவடையும் பெயர்களுடைய மாணவர்களும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பட்டியலில்இடம் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
34 கல்லூரிகளில் படித்து வரும் இந்த மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் வெளிவரலாம்.
நந்தனம் பொறியியல் கல்லூரியில் 35 மாணவர்களும், வேல்டெக் பொறியியல் கல்லூரியில் 29 மாணவர்களும்இதுபோன்று போலி சாதி சான்றிதழ் கொடுத்து கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டகல்லூரி நிர்வாகத்திற்கும் தொடர்பு இருந்தால் அந்த நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழகம்முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications