புதுக்கோட்டை மீனவர்களை சிறை பிடித்த தொண்டி மீனவர்கள்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், புதுக்கோட்டை மீனவர்களையும் அவர்களின் 17படகுகளை சிறை பிடித்துள்ளனர்.
தொண்டியைச் சேர்ந்த மீனவர்கள் வியாழக்கிழமை மீன் பிடிக்க கடலுக்குள் சென்றபோது அங்கு சில புதியபடகுகள் மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்தனர். உடனடியாக அந்த படகுகளை சுற்றி வளைத்தனர்.படகுகளில் இருந்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து 17 படகுகளையும் கரைக்குக் கொண்டு வந்தனர். அங்கு படகுகளையும், மீனவர்களையும் பிடித்துவைத்துக் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தரப்பட்டது.
காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரங்கசாமி தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்துபேச்சுவார்ததையில் ஈடுபட்டனர். இதனையடுத்து மீனவர்களை விடுவிக்கவும் 17 படகுகளையும் ராமநாதபுரம்மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கவும் தொண்டி மீனவர்கள் ஒப்புக் கொண்டனர்.பிரச்சனையைத் தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.