மதுரை: வேனில் பிடிப்பட்ட 750 கிலோ வெடிபொருள்கள், ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் க்யூ பிராஞ்ச் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் 750 கிலோ வெடிபொருள்கள் சிக்கின. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி போலீஸார் தீவிர வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மதுரைமேலூர் அருகே கொட்டானம்பட்டியில் ஒரு வேனை போலீஸார் சோதனையிட்டனர்.
அப்போது அந்த வேனில் 750 கிலோ வெடிபொருள்கள், ஜெலாட்டின் குச்சிகள் இருப்பது தெரிய வந்தது.முறையான உரிமம் எதுவும் அந்த வெடிபொருள்களுக்கு இல்லை. போலீஸார் வேன் டிரைவரைக் கைது செய்துவிசாரித்தனர்.
விசாரணையில், தங்கவேலு என்பவருக்காக இந்த வெடிபொருள்களைக் கொண்டு செல்வதாக டிரைவர்கூறியுள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தங்கவேலுவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications