"வாத்தியாரை" கவுத்திடாதீங்கப்பா!
மதுரை:
மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் ஜனதாக் கட்சி சார்பில் போட்டியிடும் சுப்புரமணியம் சுவாமி மற்ற வேட்பாளர்களை விடபடு வித்தியாசமாக பிரசாரம் செய்து வருகிறார்.
மதுரை தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார் சுவாமி. இந்த முறை அவருக்கு ஆதரவாக ஒரு கட்சியும் இல்லை.சுயேச்சையாக போட்டியிடுகிறார். தோல்வி உறுதி என்று தெரிந்தாலும் கூட மனம் தளராமல் தைரியமாக தொகுதியைச் சுற்றிவருகிறார்.
அதிலும், மற்ற வேட்பாளர்களை விட படு வித்தியாசமாக போஸ்டர்களோ, சுவர் விளம்பரங்களோ இல்லாமல் தொகுதி முழுவதும்நேரடியாக மக்களிடம் சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
அத்தோடு நில்லாமல், மாணவர்களையும் அதிக அளவில் சந்திக்கிறார். அவரது பேச்சைக் கேட்க மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்களிடம் சுவாமி அரசியல் பேசுவதில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம், வணிகம் உள்ளிட்ட பல விஷயங்களை மாணவர்களிடம் விவாதிக்கிறார். அவரது பேச்சுத் திறமையைப் பார்த்துஅவருக்கு ஆதரவாக மாணவர்கள் திரளுவார்கள் என்பது சுவாமியின் மனக் கணக்கு.
விளம்பரமே இல்லாமல் எப்படி பிரசாரம் என்று சுவாமியிடம் கேட்டால், மதுரை மக்களுக்கு என்னைத் தெரியும், என்செயல்பாடுகளைத் தெரியும், நான் தேர்தலில் போட்டியிடுவதும் தெரியும், எனது சின்னம் தெரியும். பிறகு எதற்காக நான் தனியாகவிளம்பரம் செய்ய வேண்டும். மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு கேட்பதையே சிறந்ததாக நான் கருதுகிறேன் என்கிறார் படுதெளிவாக.
மாணவ மணிகளே, "வாத்தியாரை" கவுத்திடாதீங்கப்பா!












Click it and Unblock the Notifications