சென்னையில் மழை காரணமாக திருப்பி விடப்பட்ட விமானங்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் பெய்த திடீர் மழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன.
தமிழகத்தில் கோடை வெயில் மார்ச் மாதம் கொளுத்தத் தொடங்கியது. வெயில் கொடுமையால் அவதிப்பட்டுவரும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் திடீரென தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் மழைபெய்தது.
சென்னை மீனம்பாக்கத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் துபாயிலிருந்து 400 பயணிகளுடன் வந்த எமிரேட்ஸ் விமானம் கொழும்புவுக்குத்திருப்பியனுப்பப்பட்டது.
மும்பையிலிருந்து சென்னை வழியாக சிங்கப்பூர் செல்லும் விமானம் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டது.சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்பின.












Click it and Unblock the Notifications