For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.50 லட்சம் ஹெராயின் சென்னையில் சிக்கியது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஹெராயினை போலீஸார் சென்னையில் கைப்பற்றினர்.

சென்னை புழல் பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதையடுத்து டிஎஸ்பி சுப்பிரமணியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வேணுகோபால், ராயப்பன் தலைமையில்அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது சென்னை - நெல்லூர் சாலையில் சிலர் ஹெராயின் விற்க முயன்றனர். போலீசார் அவர்களை கையும்களவுமாக பிடித்தனர்.

விசாரணை செய்ததில் அவர்கள் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (22), பாபு (எ) தனசேகரன் (23),பாலாஜி (34), பாஷா (24) ஆகியோர் எனத் தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள 500 கிராம் ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் இந்த ஹெராயினைஇலங்கைக்குக் கடத்த முயன்றது தெரிய வந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X