மதுரை: காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார் ஜனனி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியாகியுள்ள ஜனனி, அவரது தாயார் ரமீஜா ஆகியோர் மதுரைகருப்பாயூரணி காவல் நிலையத்தில் இன்று கையெழுத்திட்டனர்.
கஞ்சா வைத்திருந்ததாக கூறி ஜனனி, ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் ஜனனியும், ரமீஜாவும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். 15நாட்களுக்கு ஒரு முறை கருப்பாயூரணி காவல் நிலையத்தில் அவர்கள் கையெழுத்திட வேண்டும் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு முறை கையெழுத்திட்டுள்ள அவர்கள் இரண்டாவது முறையாக இன்று காலை கருப்பாயூரணிகாவல் நிலையம் சென்று கையெழுத்திட்டனர். கடந்த முறையைப் போலவே இன்றும் ஏராளமான பொதுமக்கள்இருவரையும் காண திரளாகக் கூடியிருந்தனர்.












Click it and Unblock the Notifications