ஹட்கோ நிறுவன முன்னாள் இயக்குனர் கைது: சிபிஐ அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றுக்கு கடன் அளித்த விவகாரத்தில் மத்திய வீட்டு வசதித்துறை வங்கியானஹட்கோவின் முன்னாள் செயல் இயக்குனர் அருண்குமாரை சிபிஐ இன்று கைது செய்ததது.

லஞ்சம் வாங்கிக் கொண்டு, கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அரிஹந்த் என்ற ரியல்எஸ்டேட் நிறுவனத்துக்கு முறைகேடாக கடன் உதவியளித்தாகவும், கடனைத் திரும்பிப் பெற முயற்சிமேற்கொள்ளவில்லை என்றும் அருண்குமார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

ஹட்கோ நிறுவன விதிகளின்படி, ஹட்கோவிடம் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் கடன் வாங்கியிருந்தால், தான்கட்டிய வீடுகளை விற்கும்போது ஹட்கோ நிறுவனத்தின் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் அரிஹந்த் நிறுவனம் அதைச் செய்யவில்லை. ஹட்கோவின் அனுமதி இல்லாமலேயே தனதுஅடுக்குமாடிக் கட்டடத்தில் பல வீடுகளை விற்றுவிட்டது. இதற்காக அப்போதைய ஹட்கோ நிறுவனத்தின்இயக்குனர் அருண்குமாருக்கு அரிஹாந்த் நிறுவனம் பல லட்சம் லஞ்சம் தந்துள்ளது.

இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இது தொடர்பாக கடந்த ஜனவரி மாதம்அருண்குமாரின் சென்னை வீட்டிலும், ஹைதராபாத் வீட்டிலும் சிபிஐ சோதனை செய்தது. மேலும் சில ஹட்கோநிறுவன ஊழியர்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதே போல அரிஹாந்த் நிறுவனத்தின்அலுவலங்களிலும் ரெய்ட் நடந்தது.

இந் நிலையில் அருண்குமாரை சிபிஐ இன்று கைது செய்து சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தியது.

இதையடுத்து அவரை வரும் 8ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட சிபிஐ சிறப்பு நீதிபதி ராமசாமி,விசாரணைக்காக வரும் 1ம் தேதி வரை சிபிஐ கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் அனுமதியளித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+