கூட்டம் கூடவில்லை: பிரச்சாரத்தை ஒத்தி வைத்த ஜெயலலிதா
விழுப்புரம்:
விழுப்புரத்தில் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா, தனது பிரச்சாரத்துக்கு மக்கள் கூட்டம்கூடாத காரணத்தால் எரிச்சலடைந்து, பிரச்சாரத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார்.
இதையடுத்து அப் பகுதியில் கூட்டம் கூட்டுவதற்கான ஏற்பாடுகளில் அதிமுக நிர்வாகிகள் தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.
கடலூரில் அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக உளுந்தூர்பேட்டையிலும், திண்டிவனம்வேட்பாளர் அருண்மொழித் தேவனை ஆதரித்து மடப்பட்டு பகுதியிலும் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.இங்கெல்லாம் கூட்டமே இல்லை.
அதே போல விழுப்பரம் வந்த ஜெயலலிதாவை வரவேற்க சாலையின் இரு புறமும் மக்களே கூடவில்லை. சுமார் 15கி.மீ. தூரத்துக்கு ஜெயலலிதாவின் கார் வரிசை சென்ற பகுதியில் சாலையில் ஈ, காக்கா இல்லை.
இதனால் மூட்-அவுட் ஆன ஜெயலலிதா ஏற்கனவே அவருக்காக தயார் செய்யப்பட்டிருந்த, பாண்டிச்சேரிரோட்டில் உள்ள தொழிலதிபரின் பங்களாவில் தங்கினார். அப்போது கடலூர், திண்டிவனம் வேட்பாளர்களும்கட்சியின் நிர்வாகிகளுக்கும் கடும் டோஸ் விட்டார்.
கூட்டம் சேராத விழுப்புரத்தில் பிரச்சாரம் செய்யத் தயாராக இல்லை என்பதைத் தெரிவித்த ஜெயலலிதா, நேற்றுமதியமே தனது ஓய்வுத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். இன்று கூட்டத்தை கூட்டும்வேலையில் அதிமுகவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந் நிலையில் நேற்றிகரவு சென்னை திரும்பிய ஜெயலலிதா தேர்தல் வெற்றி வாய்ப்பு, மக்கள் கூடாததற்கானகாரணம் ஆகிய விஷயங்கள் குறித்து உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனைநடத்தியதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications