திமுகவுக்கு ஆதரவாய் தாதா ஜான் பாண்டியன்
திருச்சி:
பிரபல ரெளடியும், ஒரு காலத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எழும்பூர் தொகுதியில் ரத்தக் களறியைஏற்படுத்தியவருமான ஜான்பாண்டியன் இந்தத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த பயங்கர தாதாவான ஜான் பாண்டியன் பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல்வழக்குகளில் உள்ளே போய் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியை எதிர்த்துப்போட்டியிட்டார். தேர்தலில் பெரும் வன்முறையை நடத்தினார். பரிதியின் வீட்டையும் தாக்கினார்.
ஆனாலும் பரிதியிடம் தோற்றார். இந் நிலையில் கோவை தொழிலதிபர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைகிடைக்க உள்ளே போய்விட்டார். தன்னை முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றுவார் என்று நினைத்தார் ஜான்பாண்டியன்.
ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. சிறையில் இருந்தபடியே தனது அடிதடி ராஜாங்கத்தை நடத்தி வருகிறார்ஜான் பாண்டியன்.
சமீபத்தில் தனது கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை திருச்சியில் நடத்த வைத்தார் ஜான் பாண்டியன். அதில் வரும்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவோம் என்று தீர்மானமும் நிறைவேற்ற வைத்துள்ளார் தாதா பாண்டியன்.