மே 4ம் தேதி கண்ணகி கோவில் விழா
தேனி:
கேரள மாநிலத்தில் உள்ள மங்கள தேவி (கண்ணகி) கோவில் திருவிழா மே 4ம் தேதி நடைபெறவுள்ளது.
கணவன் கோவலனை தண்டித்த மதுரை மாநகரை தீவைத்து எரித்த கண்ணகி, அங்கிருந்து வந்து இந்தஇடத்தில்தான் மறைந்தாள் என்பது இதிகாசம். இந்த இடத்தில் கண்ணகிக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. மங்களதேவி கோவில் என்று இது அழைக்கப்படுகிறது.
கோவில் உள்ள இடம் கேரள மாநிலத்தில் உள்ளது. இங்கு வழிபட வரும் தமிழக பக்தர்கள் பலவித நெருக்கடிக்குஉள்ளாக்கப்படுவது வழக்கம். இருப்பினும் தமிழக பக்தர்கள் ஆண்டுதோறும், சித்திரை மாதம் பெளர்ணமியன்றுஇங்கு வந்து பொங்கல் வைத்து பூஜை செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான கண்ணகி கோவில் விழா குறித்து தேனி மாவட்ட வருவாய் அதிகாரி மாத்து, டி.எஸ்.பி. காசிவிஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அதிகாரிகளின் கூட்டம் கம்பம் நகரில் நடந்தது. அப்போது மே 4ம் தேதிகண்ணகி கோவில் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications