பிளஸ் டூ கணிதத் தேர்வில் தவறான கேள்வி: மாணவ-மாணவிகள் குழப்பம்
சென்னை:
பிளஸ் டூ கணிதத் தேர்வில் தவறான கேள்வி கேட்கப்பட்டதால் மாணவர்கள் அதற்கு பதில் எழுத முடியாமல்தவித்தனர்.
கடந்த 10ம் தேதி தொடங்கிய பிளஸ்- டூ தேர்வுகள் இன்றுடன் முடிவடைந்தன. இந் நிலையில் நேற்று நடந்த கணிதத்தேர்வில் 5 மதிப்பெண் கொண்ட ஒரு கேள்வி தவறானதாக இருந்தது. இதனால் அதற்கு என்ன விடையெழுதுவதுஎன்று தெரியாமல் அவர்கள் குழம்பினர்.
தேர்வுக் கண்காணிப்பாளர்களிடம் மாணவ, மாணவிகள் இது குறித்துக் கேட்டபோது அவர்கள் உயர்அதிகாரிகளைத் தொடர்பு கொண்டனர். தேர்வு நடக்கும் நிலையில் ஏதும் செய்ய முடியாது என்பதால், அந்தக்கேள்வியைத் தவிர்த்துவிடும்படி மாணவ, மாணவிகளுக்கு பதில் தரப்பட்டது.
இந்தத் தவறான கணக்கு, பாடப் புத்தகத்திலும் இருந்துள்ளது. இதனால் அதை நீக்குமாறு பல்வேறு பள்ளிகளில்இருந்து எடுத்துச் சொல்லப்பட்டும் கூட அதை கல்வித்துறை கடைசி வரை நீக்கவில்லை. இந் நிலையில் அதேகணக்கு இன்று கேள்வித் தாளிலும் கேட்கப்பட்டுவிட்டது.
கடந்த ஆண்டும் இதே போல ஒரு 10 மதிப்பெண் கொண்ட கேள்வி தவறாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து அந்தக் கேள்விக்கு என்ன விடை எழுதியிருந்தாலும் முழு மதிப்பெண் தருமாறு தேர்வுத்துறைஉத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த முறையும் அதே முறை பின்பற்றப்படும் என்று நம்பப்படுகிறது.
நாளை முதல் எஸ்எஸ்எல்சி தேர்வுகள்
இந் நிலையில் தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் நாளை (ஏப்ரல் 1ம் தேதி) தொடங்குகின்றன. மொத்தம் 6.79லட்சம் மாணவ-, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
நாளை தொடங்கி வருகிற 16-ம் தேதி வரை இத் தேர்வுகள் நடக்கும்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாநிலம் முழுவதும் 2, 358 மையங்களில் மொத்தம் 6.79 லட்சம் மாணக்கர்கள் எழுதஉள்ளனர். சென்னை நகரில் மட்டும் மொத்தம் 35,440 மாணவ-, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
மெட்ரிக்குலேஷன் பள்ளித் தேர்வினை மொத்தம் 86,735 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். ஆங்கிலோஇந்தியன் தேர்வை 4,814 பேர் எழுதுகிறார்கள்.
வினாத்தாள் வைக்கப்பட்டிருக்கும் தேர்வு மையங்கள் அனைத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும்போடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ளதால் பல கட்சியினரும் ஆங்காங்கே மைக்குகளைக் கட்டி அலற விட்டுள்ளனர்.இதனால், பிளஸ் டூ தேர்வுக்கு தயாரான மாணவ, மாணவிகளும், பத்தாம வகுப்பு மாணவ, மாணவிகளும் பெரும்தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.