நிருபர்களுக்கு ஐஸ் வைத்த வைகோ

Subscribe to Oneindia Tamil

கோவை:

பொடா சிறை வாசத்தின்போது என் மீதும், என் கட்சி மீதும் பத்திரிக்கைகள் காட்டிய பேராதரவுக்கு என்றென்றும்கடமைப்பட்டுள்ளேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார். அவர்பேசுகையில், பொடா சிறைவாசத்தின்போது என்னைப் பற்றியோ, என் கட்சியைப் பற்றியோ, என் கட்சியினர்பற்றியோ ஒரு வார்த்தை கூட பத்திரிக்கைகளில் தவறாக செய்தி வந்ததில்லை.

மதிமுக மீதும், என் மீதும் பத்திரிக்கைகள் அளவு கடந்த ஆதரவை காட்டின.

எனது புகழை அதிகப்படுத்தியுள்ளீர்கள். 10,000 பொதுக் கூட்டங்களில் பேசினாலும் கிடைக்காத பாராட்டைஉங்களது செய்திகள் மூலம் எனக்குத் தேடிக் கொடுத்துள்ளீர்கள்.

உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். எனது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து நன்றிகூறுகிறேன் என்று வைகோ கூறியபோது, செய்தியாளர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

பத்திரிக்கையாளர்களை சற்றும் மதிக்காத முதல்வர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றஅரசியல்வாதிகளை பார்த்து விட்டு வைகோ போன்ற அரசியல்வாதிகளையும் பார்க்கும் பத்திரிக்கையாளர்களுக்குவைகோவின் பேச்சு நெகிழ்வை ஏற்படுத்தியதில் ஆச்சரியம் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+