சென்னையில் இன்று ஜெ, கருணாநிதி, வெங்கையா பிரசாரம்
சென்னை:
சென்னையில் இன்று முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடுஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள்.
ஜெயலலிதா இன்று மாலை சென்னை புறநகர் பகுதிகளான போரூர், அய்யப்பன் தாங்கல், காட்டுப்பாக்கம்,கரையான்சாவடி, பூந்தமல்லி, திருமழிசை, வெள்ளவேடு, மணவாளநகர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.இரவு திருவள்ளூரில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
தொடர்ந்து கொசவன்பாளையம், பட்டரைபெரும்புதூர், திருவாலங்காடு வழியாக அரக்கோணம் சென்று அங்குபொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
கருணாநிதி மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனின் தேர்தல் பிரசாரத்தைத் மாலை 3.30 மணிஅளவில் சிந்தாதிரிப்பேட்டை மே தினப்பூங்கா அருகே தொடங்கி வைத்து பேசுகிறார். பின்னர் தயாநிதிமாறனுடன் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் மத்திய சென்னை பகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.
வெங்கையாநாயுடு இன்று சென்னை மாநகர் முமுழுவதும் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்கிறார். அதிமுகவேட்பாளர்கள் பதர்சயீத் (தென்சென்னை) பாலகங்கா (மத்திய சென்னை), மற்றும் பாஜக வேட்பாளர் சுகுமாறன்நம்பியார் (வடசென்னை) ஆகியோரை ஆதரித்து பேசுகிறார்.
மாலையில் வடசென்னை தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகிறார்.
அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசனும் இன்று சென்னையில் பிரசாரம் செய்கிறார். மண்ணடி,எம்.சி.சாலை, மண்ணப்ப முதலி தெரு, பெரம்பூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.