மதுரை வழக்கறிஞர்கள் 2வது நாளாக தர்ணா
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கண்டித்து மதுரை நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று இரண்டாவதுநாளாக தர்ணாப் போராட்டம் நடத்தினர்.
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளையைத் திறக்கக் கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு மதுரை வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை வழக்கறிஞர்களுக்கு எதிர்ப்புதெரிவித்து மதுரை நீதிமன்ற வளாகத்தில் நேற்று தர்ணாப் போராட்டம் நடந்தது. இன்று 2வது நாளாக தர்ணாதொடர்ந்து நடந்தது.
சென்னை வழக்கறிஞர்கள் தங்களது எதிர்ப்பைக் கைவிடும் வரை போராட்டம் தொடரும். திட்டமிட்டபடி மதுரைஉயர் நீதிமன்றக் கிளையை ஏப்ரல் 13ம் தேதி திறக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications