அடக்கி வாசிக்கும் அரசு ஊழியர் சங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தேர்தல் காரணமாகஒத்திவைத்துள்ளது தமிழக அரசு ஊழியர் சங்கம்.

கடந்த ஆண்டு மேற்கொண்ட காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டநடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரியும், ரத்து செய்யப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கக் கோரியும், மார்ச்மாதம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க தமிழக அரசு ஊழியர் சங்கம் திட்டமிட்டிருந்தது.

ஆனால் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதால் தங்களது போராட்டத்தை அவர்கள்ஒத்திவைத்துள்ளனர். ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் செயல்படுவதாக அரசு ஊழியர்கள் மீது அரசுகாட்டமாக உள்ளது.

இந் நிலையில் இப்போது உண்ணாவிரதம் நடத்தினால், அதையும் அரசியல் கண்ணோட்டத்துடன் அரசு பார்க்கும்,தேவையில்லாத பிரச்சினை வேண்டாம் என்பதற்காகவே போராட்டத்தை ஒத்திவைத்து விட்டதாக அரசு ஊழியர்சங்கத்தினர் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+