சோனியா பிரதமரானால் ஜெ. டிஸ்மிஸ்: இளங்கோவன்
சென்னை:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமரானதும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு டிஸ்மிஸ்செய்யப்படும் என்று கோபிச்செட்டிபாளையம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் கூறியுள்ளார்.
வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்பு இளங்கோவன், காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை தலைவர்ப.சிதம்பரம் ஆகியோர் இன்று பகல் 1 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்பினார்கள்.
விமான நிலையத்தில் நிருபர்களுக்கு இளங்கோவன் அளித்த பேட்டியில்,
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. புதுவைஉட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அகில இந்திய அளவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று சோனியாகாந்தி பிரதமர் ஆவார். அவர் பிரதமரான 2, 3 வாரங்களில் ஜெயலலிதா ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் என்றார்.
-மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்வதுதான் காங்கிரஸ் கலாச்சாரமா என்ற கேள்விக்கு, ஜெயலலிதா மீது மக்கள்வெறுப்பில் உள்ளனர். அவரது ஆட்சியை கலைக்க மக்களே கோரிக்கை வைப்பார்கள் என்று பதில் கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வராவிட்டால் நீங்கள் எல்லாரும் ராஜனாமா செய்வீர்களா என்ற கேள்விக்கு, அதற்குஅவசியம் நேராது. காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்றார்.












Click it and Unblock the Notifications