ஜெவை விமர்சிப்பதா? கும்பகோணத்தில் திமுகவினர் மீது "கள்ளர்கள்" கல்வீச்சு
கும்பகோணம்:
கும்பகோணத்தில், ஜெயலலிதாவை விமர்சித்து திமுகவினர் பிரசாரம் செய்ததால் ஆத்திரமடைந்த கள்ளர்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கல்வீச்சில் இறங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம் அருகே ஆலங்குறிச்சி, திருப்புறம்பியம் ஆகிய கிராமங்களில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும்திமுக வேட்பாளர் பழனிமாணிக்கத்திற்கு ஆதரவாக திமுகவினர் பிரசாரம் மேற்கொண்டனர்.
ஜெயலலிதாவை விமர்சித்தும், அதிமுகவுக்கு எதிராகவும் திமுக தொண்டர்கள் கோஷமிட்டபடி சென்றனர்.அப்பகுதியில் வசிக்கும் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தீவிர அதிமுக அனுதாபிகள். திமுகவினர் கோஷத்தால்அவர்கள் கோபமடைந்தனர்.
திமுகவினரை முற்றுகையிட்டு உடனடியாக திரும்பிச் செல்லுமாறும், ஜெயலலிதாவை எதிர்த்து கோஷமிடக் கூடாதுஎன்றும் அவர்கள் கூறினர். ஒரு சிலர் கற்களை எடுத்து திமுகவினர் மீது வீசவே அங்கு பரபரப்பு ஏற்பட்டது.நிலைமையை உணர்ந்த திமுகவினர் சப்தம் போடாமல் அந்த இடத்தைக் காலி செய்தனர்.