இன்று பிரசாரத்தை தொடங்குகிறார் நெடுமாறன்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ள பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்கள் திமுககூட்டணிக்கு ஆதரவாக தங்களது தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார்கள்.
நெடுமாறன், சுப.வீரபாண்டியன், தாயப்பன் ஆகியோர் மதுரையில் இன்று தங்கள் பிரசாரத்தைத்தொடங்குகிறார்கள். முதல் கட்டமாக மதுரை, திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர்,வாலாந்தூர், உசிலம்பட்டி, வத்தலகுண்டு, திண்டுக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை,புதுவை, அம்பத்தூர் ஆகிய இடங்களில் இம்மாதம் 11ம் தேதி வரை பிரசாரம் செய்கிறார்கள்.
இரண்டாவது கட்டப் பயணத்தை இம்மாதம் 17ம் தேதி விழுப்புரத்தில் தொடங்கி நெய்வேலி, உளுந்தூர்பேட்டை,கள்ளக்குறிச்சி, இடைப்பாடி, சேலம், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், கோவை, திருப்பூர், சென்னை ஆகியஇடங்களில் 25ம் தேதி வரை பிரசாரம் செய்கிறார்கள்.












Click it and Unblock the Notifications