அரசியல் கலாச்சார சீரழிவு: கருணாநிதி வருத்தம்
சென்னை:
அரசியல் கலாச்சாரம் சீரழிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உயிருடன் இருப்பதற்காக வருத்தப்படுகிறேன்என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
பெருந் தலைவர் காமராஜர் குறித்து பத்திரிக்கையாளர் வீரபாண்டியன் எழுதியுள்ள ஆகட்டும் பார்க்கலாம் என்றபுத்தகத்தை கருணாநிதி வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில்,
திமுகவும், காங்கிரஸும் எதிரெதிர் அணியாக இருந்தபோது, காமராஜருக்கு எதிராக அண்ணாவோ அல்லதுநானோ அபவாத சொற்களை வீசியதில்லை, தரக்குறைவான முறையில் நடந்து கொண்டதும் இல்லை. தனிப்பட்டவிரோதம் பாராட்டியதுமில்லை.
பெரியார், அவருக்குப் பிறகு அண்ணா, அவருக்குப் பிறகு காமராஜர் என அத்தனை அரசியல் தலைவர்களும்அரசியல் கலாசாரத்தையும் பண்பாட்டையும் கட்டிக் காத்தனர். எனக்கு அரசியல் கலாசாரத்தைக் கற்றுக்கொடுத்தவர்கள் அவர்கள் தான்.
ஜாதி, மத பைத்தியக்காரத்தனத்தை சமுதாயத்தில் இருந்து ஒழித்திட காமராஜரின் போதனைகளை அனைவரும்படித்திட வேண்டும். அவரது சிந்தனைகள் இந்த சமூகத்துக்கு இன்றும் தேவை.
காமராஜருக்கு எதிராக 1967ம் ஆண்டு நடந்த விருதுநகர் தேர்தலில் சீனிவாசனை வேட்பாளராக நிறுத்திகாமராஜரைத் தோற்கடித்ததற்காக திமுக எப்போதும் வருத்தப்பட்டிருக்கிறது. இப்போதும் வருத்தப்படுகிறது.(சீனிவாசன் தற்போது அதிமுகவில் உள்ளார்).
குடியாத்தம் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலின்போது காமராஜர் போட்டியிட திமுகவும், திகவும் ஆதரவுஅளித்தன. ஆனால் கம்யூனிஸ்டுகள் அப்போது அதை எதிர்த்தனர்.
காமராஜர் காலத்தையும் இப்போதைய காலத்தையும் பார்க்கும்போது ஏன் தான் உயிருடன் இருக்கிறோமோ என்றுநினைக்கத் தோன்றுகிறது என்று வேதனையுடன் கூறினார் கருணாநிதி.
இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள் ஜி.கே.வாசன், குமரி அனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்தா.பாண்டியன், கவிஞர்கள் வைமுரத்து, அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications