சென்னை திரும்புகிறார் ரஜினி: அதிரடி அறிவிப்பு வரும் என ரசிகர்கள் நம்பிக்கை
சென்னை:
இரு தினங்களுக்கு முன்பே சென்னை திரும்பத் திட்டமிட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் நாளை அல்லது மறுநாள் தான்வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வந்தவுடன் அவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து ஏதாவது அதிரடிஅறிவிப்பை வெளியிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலம் சிருங்கேரி மடத்தில் தங்கியிருக்கும் ரஜினி அங்கிருந்தபடியே, பா.ம.க-ரசிகர்கள் மோதல்தொடர்பாக அறிக்கை வெளியிட்டார். அதில் விரைவில் சென்னை வருவேன், மனம் திறப்பேன் என்று சஸ்பென்ஸ்வைத்திருந்தார்.
சிருங்கேரி பாரதி தீர்த்த மடாதிபதியின் விழாவில் கலந்து கொண்டுள்ள ரஜினி நாளை அல்லது மறுநாள் தான்சென்னை வருவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்தனை நாட்களாக மறைமுக அரசியல் நடத்தி வந்த ரஜினி, தற்போது நேரடியாக களம் இறங்குவார் எனஅவரது ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
ரஜினி என்ன சொல்லப் போகிறார் என்று தெரியாத நிலையில் இதைத் தான் சொல்ல வேண்டும் என்றதீர்மானத்துடன் அவரது ரசிகர்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications