செருப்பு ஊழல்: இந்திரகுமாரி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
முன்னாள் அமைச்சர்கள் இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மீதான இலவச செருப்பு ஊழல் வழக்கில் வரும்16ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி மதிவாணன் அறிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கடந்த பள்ளி மாணவர்களுக்கு இலவச செருப்புகள் வழங்குவதில் ரூ. 1.10கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக முன்னாள் அமைச்சர்கள் இந்திரகுமா, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட 21 பேர்மீது கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு முதலாவது தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு தான் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் 23ம் தேதி சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல்7ம் தேதி (இன்று) வழங்கப்படும் என்று நீதிபதி மதிவாணன்அறிவித்திருந்தார். இதனால் இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோர் இன்று காலை நீதிமன்றத்திற்குவந்திருந்தனர்.
ஆனால், இன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை. தீர்ப்பை வரும் 16ம் தேதி வழங்குவதாக நீதிபதி இன்று அறிவித்தார்.
வரும் 16ம் தேதி சரவணபவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மீது ஜீவஜோதி தொடர்ந்த வழக்கிலும் தீர்ப்புவழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications