கர்நாடகத்திலும் பாஜகவுடன் கூட்டணி: அதிமுகவுக்கு 2 சட்டமன்ற தொகுதிகள்
சென்னை:
கர்நாடகாத்திலும் அதிமுக - பா.ஜ.க.இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுடன் கர்நாடகாவில் சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடைபெறவுள்ளது. பெங்களூர்நகரில் உள்ள காந்திநகர், சிக்பேட்டை, பாரதிநகர், சாந்திநகர் (தனி) மற்றும் கோலார் தங்கவயல் (தனி) ஆகியசட்டசபைத் தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்களும் தாக்கல் செய்தனர். இந்நிலையில் ஜெயலலிதா இப்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:
கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே தொகுதிஉடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதன்படி காந்திநகர், கோலார் தங்கவயல் (தனி) ஆகிய இரண்டு தொகுதிகளில் அதிமுக போட்டியிடும்.
மற்ற தொகுதிகளான சிக்பேட், பாரதிநகர், சாந்திநகர் (தனி) ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை அதிமுகவினர் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
இரண்டு தொகுதிகளில் கட்சியின் வெற்றிக்கும், மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சியின் வெற்றிக்கும்அதிமுகவினர் பாடுபட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications