குடும்பமே தற்கொலைக்கு முயற்சி: 2 குழந்தைகள் சாவு
கோவை:
கோவையில் மனைவி, மகன், மகளுடன் தந்தையும் விஷம் குடித்தார். விஷம் கொடுத்தும் சாகாதகாரணத்தால் குழந்தைகளை கழுத்தை நெறித்து தந்தை கொன்றுள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த உர வியாபாரி மணியன் (38). இவர் தனது மனைவி ஹேமலதா (35), மகன்சீனிவாசன் (10), மகள் மோனிகா (3) ஆகியேருடன் சில நாட்களுக்கு முன் கோவை வந்தார்.
பிரபல லாட்ஜில் அறை எடுத்துத் தங்கியிருந்த இவர்களின் அறைக் கதவு இன்று காலை நெடு நேரம்வரை திறக்கப்படவில்லை. தட்டிப் பார்த்தும் திறக்காததால், போலீசாருக்கு லாட்ஜ் நிர்வாகம் தகவல்தந்தது.
போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது மகன், மகள் இருவரும் வாயில் நுரைதள்ளி பிணமாகக் கிடந்தனர். மணியனும் ஹேமலதாவும் அருகில் மயங்கிக் கிடந்தனர்.
இந்த இருவரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஹேமலதாவின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது.
குழந்தைகளின் கழுத்தில் நெறிக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. விஷம் கொடுத்தும் அவர்கள்சாகாததால் மணியனே கழுத்தை நெறித்துக் கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இவர்கள் தங்கியிருந்த அறையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், தொழிலில் நஷ்டம் காரணமாகதற்கொலை செய்து கொள்கிறோம் என்று மணியன் எழுதியுள்ளார்.