கொள்ளையில் ஈடுபட்ட ஆயுத படை போலீஸார்!!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

நெல்லையில் நகைக்கடை உரிமையாளர்களைத் தாக்கி, நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் மதுரையைச்சேர்ந்த ரிசர்வ் போலீஸ் (ஆயுதப்படை போலீஸார்) படையைச் சேர்ந்த 4 காவலர்கள் உள்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 5ம் தேதி சென்னையைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர்கள் லலித்குமார், கந்திலால் ஆகியோர்நெல்லை வந்தனர். அங்கு தங்களது வியாபார வேலைகளை முடித்துக் கொண்டு ரயில் மூலம் சென்னை திரும்பநெல்லை ரயில் நிலையத்துக்கு வந்தனர்.

அப்போது, சிலர் அவர்களைத் தாக்கிவிட்டு, அவர்கள் வசமிருந்த ரூ.18 லட்சம் மதிப்பிலான தங்கபிஸ்கட்களையும், நகைகளையும் கொள்ளையடித்துவிட்டுத் தப்பினர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனர்.

இந் நிலையில், இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர். இவர்களில்4 பேர் ஆயதப் படை போலீஸார் என்ற அதிர்ச்சியான தகவல் விசாரணையில் தெரிய வந்தது.

இவர்களிடம் இருந்து 727 கிராம் தங்கமும், ரூ.18,000 பணமும் கைப்பற்றப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்குதொடர்பாக மேலும் ஒருவர் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இவர்கள் அனைவரிடமும்விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த வருடம் திருச்செந்தூரில் ஒரு நகைக் கடை கொள்ளைக்கு உதவியதாக ஒரு போலீஸ்காரர் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+