தொடங்குகிறார் ஏ.சி.எஸ்; தொடங்கி வைக்கிறார் சு.சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தின் தேர்தல் பிரசாரத்தை ஜனதாக் கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியம்சுவாமி இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
புதிய நீதிக்கட்சியும், ஜனதாக் கட்சியும் தமிழகத்தில் நான்காவதாக ஒரு கூட்டணி அமைத்துள்ளன. இருகட்சிகளும், ஜனதாக் கட்சியின் ஏர் உழவன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. புதிய நீதிக் கட்சியின் வேட்பாளர்பட்டியலை 1,2,3 என பட்டியல் பட்டியலாக ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
இந் நிலையில், இன்று முதல் தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கிறார் ஏ.சி.சண்முகம். ஜெயலலிதா,கருணாநிதி ஆகியோர் தொடங்கிய அதே மெரீனா கடற்கரை குடிசை மாற்று வாரிய அலுவலகம் முன்பிருந்தேஏ.சி.சண்முகத்தின் பிரசாரம் தொடங்குகிறது.
சு.சுவாமி பிரசார பயணத்தை தொடங்கி வைக்கிறார். அவருடன் சந்திரலேகாவும் வருகிறார்.












Click it and Unblock the Notifications