திருவண்ணாமலையில் ராமதாஸ் கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசின் கொடும்பாவியை ரஜினி மக்கள் நலப்பேரவை என்ற அமைப்பினர் எரித்தனர்.
ரஜினி மக்கள் நலப் பேரவை என்ற பெயரில் பேனர் பிடித்துக் கொண்டு ராமதாசின்கொடும்பாவியை சிலர் எரித்தனர். இவர்கள் ரஜினி ரசிகர்களே என்று தெரிகிறது.
ஆனால், இன்று திருவண்ணாமலை வந்த மன்றத் தலைவர் சத்ய நாராயண ராவ் கூறுகையில்,நற்பணி மன்றத்துக்கும் ரஜினி மக்கள் நலப் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும்அந்தப் பேரவையினரின் உணர்வுகளை மதிக்கிறேன்.
இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் ரசிகர் மன்றத்தினருடன் இணைந்து செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications